23
சங்கார காலம். ஈமம்-உலகம் சங்கரிக்கப்பட்ட பெரு வெளி. ஆடுதல்-மீள உலகத்தைத் தோற்றுவித்தற் பொருட்டுச் செய்யும் அருட் கூத்து.
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபொன் மின்னுவன்
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின்—ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.
(26)
தொங்கும் இயல்பினவாகிய (உமையம் மையாரது) குழலும் (இறைவனது) சடையும் ஆகிய இவை பொன்மலை பொன்னொளியும் மின்னொளியும் பெற்றுத் திகழ்ந்தாற்போன்றனவாகி இறைவனது திருமேனியின் அயலே ஒளிமிகுந்து தோன்ற நஞ்சக் கறை பொருந்திய திருமிடற்றையுடைய அவ்விறைவனது பொன் மார்பின்கண் எவ்விடத்தும் ஞான்று தோன்றும் அக்குமாலையும் பாம்பும் (குழலும் சடையுமாகிய அவற்றையொத்து) விளங்கி மிளிரும், எ-று.
‘தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்னதோற்றச் செழுஞ் சுடரே’ என வரும் திருவாசகத் தொடர் இங்கு நினைக்கத் தகுவதாம். குழற் சடைகள்-குழலும் சடையும் ஆகிய அவை. குழல்-கூந்தல்; ‘குழலார் சிறு புறத்துக் கோல்வளை’ என்பர் பின்னும் (அற்புத-51). இனி, கடை ‘குழன்ற சடைக் கற்றைகள்’ எனப் பொருள் கொண்டு, ‘பொன்வரைபோன் மின்னுவன’ என்ற பாடத்திற்குப் ‘பொன்னின் கீற்றினையொத்து ஒளி வீசுவன’ எனப் பொருள் கூறுதலும் பொருந்தும்.