பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சங்கார காலம். ஈமம்-உலகம் சங்கரிக்கப்பட்ட பெரு வெளி. ஆடுதல்-மீள உலகத்தைத் தோற்றுவித்தற் பொருட்டுச் செய்யும் அருட் கூத்து. ஞான்ற குழற்சடைகள் பொன் வரை பொன் மின்னுவன போன்ற கறைமிடற்ருன் பொன் மார்பின் ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு. (26) .ெ த ங் கு ம் இயல்பினவாகிய (உமையம் மையாரது) குழலும் (இறைவனது) சடையும் ஆகிய இவை பொன் மலே பொன்ைெளியும் மின்ைெளியும் பெற்றுத் திகழ்ந்தாற்போன்றனவாகி இறைவனது திரு மேனியின் அயலே ஒளிமிகுந்து தோன்ற நஞ்சக் கறை பொருந்திய திருமிடற்றையுடைய அவ்விறைவனது பொன் மார்பின் கண் என்விடத்தும் ஞான்று தோன்றும் அக்குமாலேயும் பாம்பும் (குழலும் சடையுமாகிய அவற்றையொத்து) விளங்கி மிளிரும், எ-று. 'தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றச் செழுஞ் சுடரே" என வரும் திருவாசகத் தொடர் இங்கு நினைக்கத் தகுவதாம், குழற் சடைகள்-குழலும் சடை யும் ஆகிய அவை. குழல்-கூந்தல்; குழலார் சிறு புறத்துக் கோல்வளே’ என்பர் பின்னும் (அற்புத-51). இனி, கடை குழன்ற சடைக் கற்றைகள்’ எனப் பொருள் கொண்டு, பொன் வரை போன் மின்னுவன’ என்ற பாடத்திற்குப் பொன்னின் கீற்றினையொத்து ஒளி வீசுவன” எனப் பொருள் கூறுதலும் பொருந்தும்.