பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 வெளிப்பட்டுத் தோன்றி யருள் புரிபவன் இறைவன் ஒருவனேயாதலின் அவனது திருவருட் பெருமையே ஏனேயெல்லார் பெரு ைமகளிலும் உயர்வுறவுயர்ந்தது என்பது கருத்து. ஆரொருவர் உள்குவா ரு ள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுத் தோன்றும்' எனத் திருநாவுக்கரசரும் எவ்வுருவில் யாரொருவர் உள்குவாருள்ளத்துள், அவ்வுருவாய்த் தோன்றி யருள் கொடுப்பான்’ எனச் சேரமான் பெருமாளும் இத்திருப் பாடற்கருத்தினே இனிது விளக்குதல் காண்க. ஆமா றறியாவே வல்வினைகள் அந்தர த்தே நாமாளென் றேத்தார் நகர் மூன்றும்-வேமா ருெருகனையாற் செற்ருனே யுள்ளத்தா லுள்ளி அருகனோபா தாரை யடும். (34) இ-ள்: வ லி ய தீவினைகள், (செய்தோரைத் தொடர்ந்து சென்று) அவர்க்காம் முறைமையினே யறி யாத சடப் பொருளே யானுலும், நாம் அரன் அடிமை” என்னுந் துணிபுடன் இறைவனேயே த்தி வழிபடாத அவுனர்கள் தமக்குப் பாதுகாவல் செய்யும் அரண்க ளாக வானிடத்தே அமைத்துக்கொண்ட முப்புரங் களும் ஒரம்பினுல் வெந்து சாம்பராகும்படியழித்த சிவ பெருமானே நெஞ்சார நினைந்து அவனருளேச் சார்ந் தொழுகாதாரைத் தாமே அணுகிச் சுடுவனவாம். எ-று. வல்வினேகள் ஆம் ஆறு அறியாவே (எனினும்), ஒரு கணையாற் செற்ருனே உள்ளத்தால் உள்ளி அருகு அணையாதாரை, அடும் என முடிக்க. இனி, ஆமா றறியாமே? என்பது பாடமாயின், அருகனையாதா ராகிய அன்னேர், தாம் ஆமாறு மற்றென்று சூழினும்