30
அவர்கள் அறியாவண்ணம் வல்வினைகள் தாம் முந்துற்று அடும்’ எனப் பொருளுரைக்க.
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும்— படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றி லுள்ள மறு.
(35)
இ-ள்: படத்தினைக் கொண்ட அழகியமிடற்றினையும் பிளந்த வாயினையும் உடைய பாம்பினை அரைக்கச்சையாகக் கட்டிய இறைவனது நீலமணி போலும் நிறம் வாய்ந்த கண்டத்திற் பொருந்திய நஞ்சக் கறையின் தோற்றம், வெண்மை நிறம் வாய்ந்த சந்திரன் தனது நிலவொளியினால் தன்னைக் கொல்லும் என்று இருளானது அஞ்சிப் போந்து கண்டத்தினைப் புகலிடமாகக் கொண்டு தங்கியதனை ஒக்கும். எ-று.
மணிமிடற்றிலுள்ள மறு, இருள், வெண்மதி அடுமென்று அஞ்சிப் போந்து இடங்கொண்டிருக்கின்றதை ஒக்கும் என முடிக்க. இது தற்குறிப்பேற்ற உவமை. கண்டாய் - அசை.
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகந்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆவா—உறுவான்
தளரமீ தோடுமேல் தான தனை யஞ்சி
வளருமோ பிள்ளை மதி.
(36)
இ-ள்: (எல்லையற்ற பேரருளுக்கு அடையாளமாகத் திகழும்) நஞ்சக்கறை வாய்ந்த திருமிடற்றை