பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ஆகிய ஒளியுடைய ராய் இறைவன் பால் அன்புடை வானுேர்களே அவன் செய்யும் பிச்சை யேற்றல் முதலிய தொழில்களே விலக்க முன் வந்தில ராயின், அத்தொழிலின் நோக்கத்தைச் சிற்றறிவினராய யாமோ உணர்த்த வல்லோம் என்பார், 'பொங்கொளிய வானேர் விலக்காரேல் யாம் விலக்க வல்லமோ என்றும் கூறினர். இதல்ை, திங்கள் சூடுதல், பிச்சை யேற்றல் முதலாக இறைவன் செய்தருளும் தொழில் களின் நிறைகுறைகளைக் கண்டறிதல் சிற்றறிவுடைய மக்களாகிய நம்மைேர்க்கு ஒவ்வாததாம் 究了怒枋” அம்மையார் குறிப்பால் அறிவுறுத்தருளின ராயிற்று. அடிகள் செய்வன ஆர்க்கறிவொண்ணுமே என வரும் ஆளுடைய பிள்ளே யார் அருளிச் செயல் இங்கு நினைக் கத் தகுவதாகும். தனக்கே யடியனுப்த் தன்னடைந்து வாழும் எனக்கே யருளாவா றென் கொல்- மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானேர் பிரான். (44) இ- ள்: உள்ள த்திற்கு இனிமைதரும் மிக்க புகழை யுடையவனும் கங்கையை மனைந்த நாயகனும் சிவந்த திருமேனியை யுடைமையால் சிவன் என்னுந் திருப் பெயரைத் தனக்கே யுரியதாகக் கொண்டவனும் (தொழப்படும்) தேவர்களாலுந் தொழுது போற்றப் பெறும் தனிமுதல்வனும் ஆகிய இறைவன், (பிறரெவ ரையும் கருதாது) தனக்கே யடிமைத் தொண்டு பூண்டே கிைத் தன் திருவடிக ளேப் பற்றுக் கோடாக அடைந்து வாழும் எளியேனுக்கு எளிவந்து அருளா மைக்குரிய காரணமாக என்பாலுள்ள குற்றம் யாதோ? எ-று.