பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இ-ள் : இறைவு (பே ரூ தி க்க ல மா கி ய ) நள்ளிருட் பொழுதிலே (உலகமெலாம் சங்கரிக்கப் பட்ட) ஈமப் பெருங்காட்டிலே மிக்கெரி யும் தீயின் நடுவில் நீ பேய்களுடன் கூடியாடும் அவ்விடத்திலே யும் கூந்தல் தாழ்ந்து பரவிய சிறிய முதுகினேயும் திரண்டவாேயலேயும் உடைய நின்தேவியாகிய உமை நங்கையை நினது ஒரு பாகத்தில் அழகு பொருந்த வைத்துச் செல்லுதல் வேண்டா எ-று. . இருள் செறிந்த நள்ளிரவும், நெருப்புப் பரவிய புறங்கா டும், பேய்ச் சுற்றமும் ஆகியவற்றைக் கண்டு உமாதேவியார் அஞ்சுவர் ஆதலின் இறைவனுகிய நீ தள்ளிரவில் பேயுடன் தீயில் நின்ருடும் அவ்விடத் திற்கு உமையை அழைத்துச் செல்லுதல் கூடாது என விலக்குமுகமாக, இறைவனது திருக்கூத் க்ன் அஞ்சத் தகும் தோற்றத்தினேயும் நமது பிறவி நோய் தீர்க்கும் நன்மருந்தாக அத்திருக் கூத்தினேக் கண்டு நம்ம னுேர்க்கு அருள் சுரந்தருளும் அன்னேயாகிய உமா தேவியாரின் அமைதி நிலேயையும் குறிப்பினுல் உணர வைத்தமை காண்க. பேரிரவு-ஞாயிறு திங் க ள் முதலிய யாவும் ஒடுங்கிய பேரூழிக்காலம் ஈபப் பெருங்காடு-மக்கள், தேவர் முதலிய எல்லா வுயிர் களின் உடம்புகளும் வெந்து சாம்பராகிய ஈமப் புறங்காடு. அங்கண் முழுமதியஞ் செக்க ரகல்வானத் தெங்கு மினிதெழுந்த லொவ்வாதே-செங்கண் திருமாலேப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிர மாலே தோன்றுவதோர் சீர். 52 இ-ள் : சிவந்த கண்களேயுடைய திருமாலேத் தனது ஒரு பாகத்தே கொண்டருளிய சிவபெருமானது