48
கறுத்ததுவாகிய அதுவேயுமன்றிப் பால்மதியினுள்ளே வடுவும் உண்டு என ஓர் உம்மை விரித்துரைக்க. வடு— மாறத் தழும்பு.
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயிற்
சுடுவெண் பொடி நிறத்தாய் சொல்லாய்— படுவெண்
புலாற்றலையி னுள்ளூண் புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையிற் சூடுவாய் நீ.
(56)
இ-ள்: நன்கு சுடப்பட்ட வெள்ளிய திருவெண்ணீற்றினை யணிந்த மார்பினையுடைய பெருமானே, இறந்துபட்ட (பிரமனது) புலால் நாற்றம் வீசும் தலையோட்டிலே நீ பிச்சை யேற்றுண்ணுதல் குறித்துப் புறத்தார் இழிவாகப் பேசக் கேட்டோம். நீயோ நிலவொளி வீசும் நிறைமதியினைத் தலையிற் சூடிய தூயோன். (புலால் நாறும் பிரம கபாலத்திற் பிச்சையேற் றுண்ணுதலாகிய) நின் செயல் பழிக்கத்தக்கதன்றென மதிப்பா யாயின் அங்ஙனம் மதித்தற் குரிய காரணங்களை அடியோங்களுக்கு அறிவுறுத் தருள்வாயாக எ-று
இறைவனாகிய நீ முற்றுணர்வினன் என்பதை யாம் நன்குணர்வோமென்பார் ‘நிலாத் தலையிற் சூடுவாய் நீ’ என்றும், நிறைமதியானாகிய நீ புலால் நாறும் பிரம கபாலத்திற் பலியேற்றுண்ணுதலை இகழ்ந்துரைப்போர் நின் திருவருட்குப் புறம்பாய புறச் சமயத்தார் என்பார் ‘புறம்பேசக் கேட்டோம்’ என்றும், இங்ஙனம் எம்பெருமானாகிய நின்னைப் புறத்தார் இகழ்ந்துரைத்தலைக் கேட்டும் கவலையின்றியிருத்தல் நின்னடியார்களாகிய எம்மனோர்க்குத் தகுதியன்றாதலின் அங்ஙனம் புறம்பேசுவார் வாயடங்க