பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 'நல்ல அடி என்ருர் . ஈண்டு நன்மையாவது, தன்னே வழி பட்ட அந்தணுளராகிய மார்க்கண்டேயரது உயிர் கவரவந்த கூற்றுவனேக் கீழே விழ உதைத்துத் தன் னடியாராகிய அவரைப் பாதுகாத்த போருளுடைமை. இங்ங்னம் கூற்றுதை த்த திருவடியை எமது முடிமேற் கொண்டமையால் இனிக் கூற்றுவனேச் சிறிதும் மதியோம் என்பார் முக்களுன் நல்ல அடி மேற்கொடு கூற்றை மதியோம் என்ருர். மேற்கொடு- (தலே) மேற் கொண்டு. குனிதல்-வளேதல்; வணங்குதல். மேலும் மேலும் எல்லேயின்றி வரும் பிறவித் துன்பங்கள் எமக்கு உளவாகா என்பார், இனி அவலமுண்டோ எமக்கு, என்ருர், எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிரா தெமக்கொருநாட் காட்டுதியோ எந்தாய் அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில் ஏந்தெரிபாய்ந் தாடு மிடம். (70) (பெரு வெள்ளத்தைச் சொரிந்து) அனேக்கவும் அணேயாது பெருந்தீ சுடர்விட்டெரிந்தா லொத்த முறுக்கமைந்த சடையினேயுடைய பெருமானே, இருள் மிக்க நள்ளிரவிலே பொங்கி மேலெரியும் தீயினிடையே நீ குதித்து ஆடும் இடத்தினே எமக்கு என்ருவது ஒரு நாள் காட்டியருள் வாயோ? எந்தையே, (அவ்விடத் தைக் காண வேண்டுமென்ற ) இப்பேராசையோ எமக்கு என்றும் அடங்காத நிலையிலுள்ளது எ-று. அறிவு ஆற்றல் முதலிய தகுதிக்கு ஏற்பத் தோன்றும் விருப்பத்தை ஆசை எனவும், அவரவர் தகுதிக்கு ஒவ்வாத நிலையில் அவர்கள் பால் தோன்றும்