பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அவாவினேப் பேராசை யெனவும் வழங்குதல் மரபு. எந்தாய் நீ எரிபாய்ந்தாடும் இடத்தை யாம் காண வேண்டும் என விரும்புவது எமது தகுதிக்கு மேற்பட்ட தென்பதன யாம் அறிவோம் என்பார் எமக்கிதுவோ பேராசை என்றும், இது எம்மாற் காணவியலாதது என்பதனே யுணர்ந்திருந்தும் இவ் வேட்கையினே விட்டொழித் தற்கியலாத நிலையில் உள்ளோம் என்பார் ‘ என்றுந்தவிராது’ என்றும் கூறினர். யாம் காணும் ஆற்றல் பெற்றிலேமெனினும் எத்தகைய பொருளையும் காட்டவல்ல நினது பேராற்றலுக்கு ஒரு சி றி து ம் குறைவில்லேயாதலின் எமது வேட்கையினே நிறை வேற்றி வைப்பது எந்தையாகிய நினது கடமையாம் என வற்புறுத்துவார் எமக்கொரு நாட் காட்டுதியோ எந்தாய் எனப் பரிந்து வேண்டினர். இடப்பால வானத்தெழு மதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங் கொண்டாள் மலேப்பாவை கூருென்றுங் கண்டிலங் காண் கண்டாயே முக் கண்ணுய் கண். (71) இ-ள் : வானத்தினிடத்தே விளங்கும் பி றை மதியை இறைவனகிய நீ (நின் திருமுடியிலுள்ள) ஒப்பற்ற பாவைபோல்வாளாகிய கங்கை நங்கையின் அருகே முடிமேல் இடப்பக்கத்தில் அணிந்துள்ளனேயா யின் நினது இடப் பாகத்தினேத் தனக்கேயுரியதாகக் கொண்ட மலேமகளாகிய உமாதேவியின் திருமேனி நிறத்தினேச் சிறிதும் கண்டிலோம். மூன்று கண்ணுடை யாய் நீயாயினும் கண்டனேயோ? கருதிப் பார்ப்பாயாக என்று.