பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 பிறை மதியினே இடப்பால் திருமுடிமேல் அணிந் தமையால் அதன் நிலவொளி வீசப் பெற்று இடப் பாகத்தின் நிறமும் வெண்மையெ னி விரவி வலப்பாகம் போல் தோன்றுகின்றது எனக் குறிப்பித்தவாறு. பின்னர் மலேப்பாவையென விளங்க வைத்தமையால் முன் மடப்பாவை யென்றது கங்கை யை என்பது நன்கு புலம்ை. கண் டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன்-துண்டஞ் ੰ விண்ணுளுந் திங்களாய் மிக்குலக மேழினுக்குங் கண்ணுளா ஈதென் கருத்து, (72) இ-ள் : வானிடத்தே இயங்கும் கீற்ருய்ப் பொருந் திய பிறைத் திங்களே யணிந்த பெருமானே, மிகப் பெரியனவாய ஏழுலகங்களேயும் கண்போன்று பாது காக்க வல்ல கடவுளே, நின்னே உனது திருவருளாற் காணப்பெற்று, என் தந்தையே என்று அன்பில்ை அழைத்து வணங்கி, என்னுல் இயன்ற கைத்திருத் தொண்டினேச் செய்து மகிழேனுயின், அண்டத்தினே ஆளும் உயர்ந்த பதவி தானே வந்து கிடைத்தாலும் அதனே ஒரு பொருளாக விரும்பமாட்டேன். இதுவே எனது உள்ளத்தின் உறுதியான கருத்தாகும் எ-று. "விண் ஆளும் துண்டஞ்சேர் திங்களாய், மிக்க உலகம் ஏழினுக்கும் கண்ணுளா என்ற தொடரை முதற்கண் கூட்டிப் பொருள் கொள்க. விண் ஆளும் என் புழி ஆளுதல் என்ற சொல் பல்காலும் பயின்று இயங்குதல் என்னும் பொருளில் வந்தது. அம்மையார்