பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 இ-ள்: (வேண்டுதல் வேண்டாமையிலான் ஆகிய இறைவனது இயல்பினே யறியாத)பேதையே, பேய்கள் வாழும் சுடுகாட்டினேயே தனக்குரிய ஆடரங்கமாகக் கொண்டு ஆடும் இறைவன், பலநாளும் அ ன் பி ளு ற் பணிந்து வேண்டினுலன்றி (எல்லா வுயிர்களிடத்தும் தான் கொண்ட நடுவு நிலேயினே நீங்கி) வறிதே மன மிரங்கி அருள் புரிாைனுே? (உயிர்களது அன்பின் திற முனர்ந்து) மனமிரங்கி அருள்புரிய முற்படுவானல்ை (தன் இன வணங்கிய அடியார்களே). எத்தகைய உயர் நிலயில்தான் வைக்கமாட்டான்? எத்தகைய உயர்ந்த வுலகத்தினேத் தான் கொடுத்துக் காத்தருள மாட்டான்? (எல்லாந் தருவன்) எ-று. பேய்க்காட்டில் அரங்கமா ஆடுவான், பன்னுள் இரந்து பணிந்தால் (அன்றி) எவ்வுயிர்க்கும் வாளா இ ர ங் குமோ எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. 'எவ்வுயிர்க்கும் ஆடுவான்’ என இயைத்து, எல்லாவுயிர்களுக்கும் பாகம் வருவித்து மும்மலப் பிணிப்பைப் போக்குதற் பொருட்டு ஐந்தொழில் திருக் கூத்தினே ஆடியருள்பவனகிய இறைவன் எனப் பொருள் கொள்க. எனவே இறைவன் புரிந்தருளும் இத்திருக்கூத்து, விருப்பு வெறுப்பின்றி எவ்வுயிர்க்கும் அருள் சுரக்கும் நிலையில் பொதுமையில் நிகழ்வ தென்றும், இறைவனது திருவருளேச் சிறப்புரிமையிற் பெறவிரும்புவோர் அப்பெருமானப் பணிந்து இரந்து வேண்டினுல் பேரருளாளனுகிய அ வ் வி. ைற வன். வேண்டுவார் வேண்டுவன எல்லாம் ஈந்தருள்வான் என்றும், இங்ஙனம் ஏனேயோர்க்கன்றி அன்பினுல் தன்னேச் சார்ந்தார்க்கே தனிமுறையில் எளிவந்து நலஞ்செய்தல் பற்றி அவ்விறைவன் தனக்குரிய நடுவு