பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7愛 வருந்துகின்ருள்” என ஆறுமுகத் தம்பிரானவர்கள் பொருள் கொண்டதாகச் சிவக்கவிமணியவர்கள் தமது பெரியபுராண வுரையிற் குறிப்பிட்டுள்ளார்கள், இங்ங் னம் பொருள் கொள்ளுமிடத்து மின்’ என்பதற்கு மின் னற்கொடிபோல்வா ளாகிய ஏ ன் ம க ள் எனப்பொரு ளுரைக்க. மின் என்பது எழுவாய். உரைக்கும் என்பது பயனிலே. மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடு மீண் டிசைந்தால் என்போ லுங் காண் பார்கட் கென்றிரேல் தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே நிற்கின்ற போலு நெடிது, (83} இ-ள்: மின்னலேயொத்து மிளிரும் சிவந்த சடை யினையுடைய சிவபெருமான் (தன் ஒரு பாகத்தில் விளங்கும் காத்தற் கடவுளாகிய) திருமாலுடன் இங்கு இ ைசந்து எழுந்தருளினல் அத்தோற்றம் காண்டார்க்கு எங்ங்னம் திகழும் எனக் கேட்பீராயின், த ன க் கு த் தானே யொப்பென விளங்கும் பொன் மலேயும் நீலநிறம் வாய்ந்த மணி மலேயும் ஒருங்கிசைந்து மிகவுயர்ந்து விளங்குந் தோற்றத்தை யொப்பதாகும். எ-று. இறைவனும் திருமாலும் ஒருங்கு திகழுந் தோற்றம் பொன் மலேயும் நீல மலேயும் ஒருங்கிசைந்த ேத ற் றத்தை ஒக்கும் என்பது கருத்து. நெடிதாய பொங்கெரியுந் தண் மதியு நேரே கடி தாங் கடுஞ்சுடரும் போலுங்- கொடிதாக