பக்கம்:அலிபாபா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணந்து கொள்கிறேன். என் மனைவி நல்ல குணமுள்ளவள். உன்னை ஆதரிப்பாள்!” என்று கூறினான். அவள் அழுது அலறிக் கொண்டே, “இனி உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வதே என் கடமை!” என்றாள். பின்னர், அலிபாபாவும், மார்கியானாவும் காஸிமின் உடலை அடக்கம் செய்வதைப் பற்றி நெடுநேரம் கலந்து ஆலோசனை செய்தனர். காஸிம் கொலையுண்டு மடிந்தான் என்பதை எவரும் தெரிந்து கொள்ள முடியாதபடி காரியங்களை நடத்த வேண்டும். வெளியே எவரேனும் இரகசியத்தைத் தெரிந்து கொண்டால் பின்னர், பலருக்கும் அது அம்பலச் செய்தியாகிவிடும். திருடர்களும் அதைத் தெரிந்து கொள்வார்கள். அதிலிருந்து அலிபாபாவையும், அவனுடன் சம்பந்தபட்டவர்களையும் அவர்கள் கண்டு பிடித்துப் பழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/28&oldid=947011" இலிருந்து மீள்விக்கப்பட்டது