பக்கம்:அலிபாபா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இறந்தவனுக்குப் பாறையைத் திறக்கும் மந்திரம் தெரிந்திருந்தது; இல்லாவிட்டால், அவன் குகைக்குள் நுழைந்திருக்கவே முடியாது. இப்பொழுது அவனுடைய உடலை வேறு ஒருவன் எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். ஆகவே, இறந்தவனைத் தவிர, மற்றொருவனுக்கும் இரகசிய மந்திரம் தெரிந்திருந்தது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். காஸிமின் உடலை எடுத்துச் சென்றவன் ஏராளமான தங்க நாணயங்களையும் எடுத்துச் சென்றிருந்தான் என்பதையும் அவர்கள் கவனித்துக் கொண்டனர். திருடர் தலைவன், இத்தனைக்கும் காரணமானவனை உடனே கண்டு பிடித்துப் பழி வாங்காமல் விட்டிருந்தால், அவன் மேற்கொண்டும் அடிக்கடி வந்து பொக்கிஷத்தை அள்ளிக் கொண்டு போய் விடுவான் என்றும், பல தலைமுறைகளாகச் சேர்த்து வைத்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/35&oldid=947022" இலிருந்து மீள்விக்கப்பட்டது