இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருடர்களின் சூழ்ச்சிகள்
41
நிலையில் சிவப்புக்காவியால் தெளிவான அடையாளம் செய்துவிட்டு, வனத்திற்குத் திரும்பினான். இரவில் முன்போலவே திருடர் அனைவரும் தலைவனுடன் வந்து அவ்வீட்டைத் தேடிப் பார்த்தனர். எல்லா வீடுகளின் நிலைகளிலும் சிவப்புக் குறிகள் இருந்தமையால் மீண்டும் அவர்கள் ஏமாற்றமடைந்து, திரும்பிச் சென்றனர். எல்லா வீடுகளுக்கும் சிவப்புக் குறிகள் அமைத்தது மார்கியானா தான் என்று சொல்லத் தேவையில்லை. மதிநுட்பம் வாய்ந்த அந்தப் பெண் முன்னதாகவே அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தாள். திருடர் தலைவன் இரண்டாவது திருடனையும் சிறையில் வைத்தான்.