பக்கம்:அலிபாபா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மார்கியானா, எசமானருக்கு வேண்டிய சலவைத் துணிகளை எடுத்து அப்துல்லாவிடம் கொடுத்து விட்டு, சூப்பு தயாரிப்பதற்காக அடுப்பிலே சட்டியைத் தூக்கி வைத்தாள். அவள் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கையில், எல்லா விளக்குகளும் அணைந்து போய் விட்டன. அவற்றில் இருந்த எண்ணெய் தீர்ந்து போய் விட்டது. வீட்டிலும் வேறு எண்ணெய் இல்லை. அப்பொழுது அப்துல்லா, மார்கியானாவைப் பார்த்து, “நீ ஏன் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாய்? நமது கொட்டகையில் தாழி தாழியாக எண்ணெய் இருக்கிறது. அவசரத்திற்கு உனக்குத் தேவையான அளவு ஒரு தாழியிலிருந்து எண்ணெய் எடுத்து வா!” என்று யோசனை சொல்லிவிட்டு கூடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/48&oldid=947028" இலிருந்து மீள்விக்கப்பட்டது