பக்கம்:அலிபாபா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மார்கியானாவின் மதிநுட்பம்

47



மார்கியானா அவன் கூறிய ஆலோசனைப்படியே. எண்ணெய் டப்பாவைப் துரக்கிக் கொண்டு கொட்ட கைக்குப் போனாள். தாழிகள் பல வரிசைகளாக இருந்ததில், முன்னாலிருந்த ஒரு தாழியருகில் சென்று. அவள் மெது வாகக் குனிந்து பார்த்தாள். அதிலிருந்த திருடன், விவரம் தெரியாமல், காலோசை கேட்டதுமே தலைவன் வருவதாக எண்ணி, “நாங்கள் வெளிக் கிளம்பி வரலாமா?” என்று மெல்லிய குரலில் வினவினான். உடனே, மார்கியானா திடுக்கிட்டுப் பின்னால் நகர்ந்தாள். தாழிக்குள்ளே மனிதன் குரல் கேட்கிறதே என்று அவள் திகைத்த போதிலும், அவள் சமயத்திற்கு ஏற்றபடி உடனே யுக்தி செய்து கொண்டு, “இன்னும் நேரமாகவில்லை!” என்று, தானும் மெல்லிய குரலில் பதிலுரைத்தாள். தாழிகளில் எண்ணெய் இல்லை என்பதால், அவள் சிந்திக்கலானாள். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது! என் முதலாளிக்கு எதிராக இந்த எண்ணெய் வியாபாரி துரோகமான சதி ஏதோ செய்திருக்கிறான்! இவனுடைய வலையிலிருந்து அருளாளனான அல்லாஹ்தான் எங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும்!”

அவள் மற்றொரு தாழிப்பக்கம் சென்றாள்; அதனுள் இருந்தவனும், “வெளியே வரலாமா?” என்றே கேட்டான். மார்கியானா எண்ணெய் வியாபாரியின் குரலைப்போல் தன் குரலையும் மாற்றிக்கொண்டு, “இன்னும் நேரமாகவில்லை!” என்று பதில் கூறினாள். இவ்வாறே அவள் மற்றைத் தாழிகளில் இருந்தவர்களுக்கும் ஒரே பதிலைத் திரும்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/49&oldid=512498" இலிருந்து மீள்விக்கப்பட்டது