பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

மலைகளெல்லாம் யானைகளாகத் திரண்டு வந்ததுபோல் மதயானைகள் இடிபோலப் பிளிறுகின்றன. முகில்கள் அனைத்தும் தேர்களாக வந்து குழுமியது போல் இருக்கின்றன. வீரர்கள், போர் வெறி கொண்டு ‘உடல் நமக்கு ஒரு சுமை’ என்றும், ‘உயிரை விற்றுப் புகழ்கொள்ள வேண்டும்’ என்றும் போராடுகிறார்கள். தரையிலும் வானத்திலும் ஒரே தூளிப் படலமாயிருக்கின்றது. வளைந்த விற்கள் இடிபோல் முழங்குகின்றன; அவற்றிலிருந்து நெடுமழை போல் கூரிய அம்புகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

‘இடிகின்றன மதில்
எரிகின்றன பதி
எழுகின்றன புகை
வளைகின்றன படை’

போர் முடிவிலே களங்களிலே காணக் கூடிய காட்சிதான் என்ன! இரத்த ஆற்றில் உடைந்த தேர்களின் வெண் குடைகள் நுரையைப் போல மிதந்து கொண்டிருந்தன. இறந்து வீழ்ந்த யானைகள் அந்த ஆறுகளுக்குக் கரைகளாகக் கிடந்தன. உறுப்பிழந்த போர் வீரர்கள் ஆயிரம் ஆயிரமாகச் சிதறிக் கிடந்தார்கள்.

இப்படிப்பட்ட காட்சியையே அசோகரும் கண்டார். சாலைகளிலும் தனிப் பாதைகளிலும், உணவு, உடை, உறையுள் எல்லாம் இழந்து, கண்ணீரும் கம்பலையுமாக, இலட்சக் கணக்கான அகதிகள் திரிவதைப் பார்த்தார். இரும்பு போன்ற உறுதியுள்ள அவர் உள்ளம் மெழுகுபோல உருகத் தொடங்கிவிட்டது. வீடு, வாசல், குடும்பம், குழந்தை, உறவினர்களுடன் அமைதியாக வாழ்ந்து