இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முள் O 99
"நன்றி, விசுவாசம், நாணயம்.
“நான் சொல்லியாகிவிட்டது. இனி, நீங்கள் பாயஸ்த்தைத்தான் கொட்டுவீர்களோ, ஈனயத்தான் எடுத்தெறிவீர்களோ, உங்களிஷ்டம்! நான் சொல்லியாகிவிட்டது!’
‘'என்ன செய்கிறீர்கள்? மறுபடியும் பொக்கப் போகிறது. அட, விரலாலேயே முள்ளைக் கிள்ளி எறிந்து விட்டீர்களே! இல்லை, நீங்கள் சூட்டவேண்டாம். நான் உங்கள் குழந்தையல்ல. உங்கள் மனைவி. என் கையில் கொடுங்கள். நானே சூட்டிக்கொள்கிறேன். என்னுடைய வெற்றி; என் பிரமாணிக்கங்களின் வெற்றி!
-ஆனால் உங்களுடைய ப்ரஸாதம்.
நமஸ்கரிக்கிறேன்.
இதானே கிழக்கு?