270 O லா. ச. ராமாமிருதம்
பயமாயிருந்தது. ஆனால் துணிச்சல் ஒண்னு தனியா எங்கிருந்தோ வந்துடுத்து.
“குழந்தைகளா இது? ஒண்ணெண்ணும் ஒரொரு வானரம்னா-’’
‘வானரம்னு சொல்லாதேங்கோ என் குழந்தைகளை"ன்னு சீறினேன்.
“வானரம்னு சொல்லல்லே கிஷ்கிந்தாக்கள்ன்னு அழைக்கட்டுமா?’’ -
நேக்கு ஒரேயடியா அமுகை வந்தூடுத்து. "வாடி கண்ணே ஸீமா"ன்னு அவளை இழுத்து அணைச்சுண்டு விக்கிவிக்கி அழுதேன். (அதென்னமோ தெரியலை, அழறதுக்கு மாத்திரம் கூட ஒரு ஆள் வேண்டியிருக்கு!)
அப்பாக்கு மூஞ்சி கிளிஞ்சல் சுண்ணாம்பு மாதிரி தளைச்சுது.
இத்தனை நாழி இதெல்லாம் அம்மா வேடிக்கை பார்த்துண்டிருந்தவ, கிஷ்ணிச்சுண்டு ஏதோ தினுஸ்ஸா குரலைப் பாகுமாதிரி ஸன்னமா இழுத்துண்டு:
"ஏண்டிம்மா ஜகதா, உன் குழந்தைகளை எடுத்துக் கொஞ்சவும் சீராட்டவும் உரிமையுண்டு-துஷ்டத்தனம் பண்ணா ஒரு தட்டுத்தட்ட பெரியவாளுக்கு சுதந்திரம் கிடையாதா?’’
"கிடையாது" சுண்டைக்காய்த் தோசை கடிபடறாப் போல வெடுக்குன்னேன். அம்மாக்கு ஆத்திரம் புட்டூண்டுடுத்து. -
“என்னடீ சுயபுத்தியோடேதானிருக்கையா இல்லே-’’
"நீ சும்மாயிரு" அப்பா அம்மாவை அடக்கினார். "ஜகதா-" அப்பா குரல் நிதானத்திலிருந்தே, நெஞ்சுலே எவ்வளவு அடக்கிண்டிருந்தார்ன்னு தெரிஞ்சுது. "ஜகதா,