பக்கம்:அலைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தபஸ் O 45


சம்சாரியை விடாது அவனைப் பிடித்துக்கொண்டு தொங்கும் அவன் உழலல்கள்போலும் வண்டிகள் அதைப் பின் கல்வித் துரத்துகின்றன. வெல்லக் கட்டிமேல் மொய்த்து ஊறும் ஈ எறும்புகள்போல் நஞ்சானும் குஞ்சானுமாய் முகங்கள் பெட்டியிலிருந்து எட்டிப் பார்க்கின்றன.

வண்டி சீறிச் செல்கையில் முகங்கள் சலனப்படத்தின் ஒட்டம்போல் கண்முன் வேகமாய்ப் பாய்ந்து செல்கின்றன. 'பெண்களுக்கு மாத்திரம்’ பெட்டி வாசலில் ஒரு வெள்ளைப் புடவையின் மேலாக்கு காற்றில் கதவுக்கு வெளியே அலை மிதந்தது.

குண்டலங்கள்

"குண்டலி!"

என் அலறலை எஞ்சினின் வீறல் தன்னோடு அடித்துக் கொண்டு போயிற்று. பித்துப் பிடித்தவனாய், கடைசி வண்டி கண் மறையும்வரை பார்த்தபடி நின்றவிடத்தில் நின்றேன்.

இழுத்துப் பிடித்த மூச்சுப்போல் தண்டவாளம் ஒற்றைத் தன்மையடைந்தது. தன்னைத் தானே துரத்திச் சென்றது .

நொடியில் வருஷங்கள், நொடியில் ஒடுங்கிய சிமிழின் இருள் என்மேல் படர்ந்தது. காலம் கதிகலங்கிய சுழலில் பழையன புதியன பிரிவு அழிந்து, பத்து வருடங்களின் முன் சமயம் இப்போதென என்னைத் தொட்டுச் சென்றதும், உடல், 'ஜிவ்'விட்ட ஜன்னியில் செயலில் என்னை மீறியது, மீறின. பின்னே தெரிந்தது.

அலைகள் மெதுவாய் அடங்கலுற்றன. நினைவு, தான் மீண்ட தெளிவில் இழைகளைச் சாவதானமாய்ச் சிக்கு பிரித்து நெய்ய ஆரம்பித்தது.

அவளிடத்தில் அவளும் நின்று கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/47&oldid=1285679" இலிருந்து மீள்விக்கப்பட்டது