88 O லா. ச. ராமாமிருதம்
லிலிருந்து அடைகாத்து. பந்தலில் கையைப் பிடித்துக் கொடுத்து விட்டு, இவ்வளவு பெரிய வீட்டில் உன் இடம் வெறிச்சான அவர் நிலை எப்படியிருக்கும்! யாருக்கும் துணை வேண்டியிருக்கிறது. புருஷனும்-மனைவியுமோ, அப்பனும் மகளுமோ தாயும் மகனுமோ, ஆணும் பெண்ணுமோ-இது ஆண்டவன் நியதி.”
"எது?”
விமலா கையைக் கொடு; கண்ணீரையும் சிரிப்பையும் தாண்டி, கண்ணை உள்ளுக்குத் திறந்து பார். ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் உனக்கே தெரியும்.
ஏன் மூச்சு தேம்புகிறது?'
“நீங்கள் இது மாதிரி பேசுகையில் இன்று முழுக்க கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது. இன்ன தென்று முழுக்கப் புரியாவிட்டாலும் இன்பமும், துன்பமுமாய் மனம் ஊசலாடுகிறது. கற்கண்டுச் சிலும்பல் ஆனாலும் குத்தாமல் இல்லையே! மனம் அலை அடங்குவதுபோல் இருக்கிறது, உடனே தத்தளிக்கிறது. நிம்மதியில்லை.”
'நிம்மதி இல்லாவிட்டால் நிம்மதி அடைய வேண்டும். சமாதானம் கிட்டாவிட்டால் வலுக்கட்டாயமாய்ப் பண்ணிக் கொள்.
இந்த முயற்சி தான், வாழ்க்கையின் எல்லாமே!"
“வார்த்தைகளை எப்படிக் கொட்டறேள்! புல்லரிக்கிறது. உங்கள் நாக்கில் வாக்குப் பேசறது."