பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116 ❖ லா. ச. ராமாமிர்தம்


வாத்யார் மேலும் தனிக் காதல் இல்லை. குறிப்பிட்டு யார் மேலும் தனிக்காதல் இல்லை. ஆனால் காதல் மீது காதல் கண்டு விட்டது.”

அசந்து போனாள். “Beautiful” அவள் விழிகள் ஸ்படிகத்தில் பளபளத்தன. அவர் கையைப் பற்றியிழுத்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

“அப்பாடி! நீங்கள் சொன்னது என்னுள் ஏதேதோ சிக்குப் பிரிஞ்ச மாதிரி, மனசே லேசாயிடுத்து. சந்தோஷமாயிருக்கு. அதனாலேயே வயத்துலே குழி விழுந்தாப்போல பசிக்கிறது. வாங்கோ, சாப்பிடப் போவோம்.”