பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 & லா. ச. ராமாமிர்தம்

கோடாய்த் தெரிகிறாள். புன்னகையில் கருணை பொழிந்து கொண்டு அமானுஷ்ய அழகில் மிளிர்கிறாள்.

என் தோளைத் தொட்டுத் தன் பக்கம் இழுக்கிறாள். வரைந்த கோடு உதடுகளின் அசைவில் சொற்களைப் படிக்கிறேன். படிக்க வருகிறது.

நான் ஸத்யை

நான் நிர்வாணி

நான் வ்யாபகி

நான் நித்யை

நான் மரணி

அவள் கைகள் என் கழுத்தில் விழுந்து ஆலிங்கனத்தில் இறுகுகின்றன. அவள் மார்பின் மெத்தில் உருகுகிறேன். கரைகிறேன், எனக்கில்லாமல் போய் விடுகிறேன்.