பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ராசாத்தி கிணறு ❖ 19


இருந்தது. அவள் மேல் ஆத்திரமும், அவளைப்பற்றிய
பொறாமையும் அவனுக்கு அளவுக்கு மீறி இருந்தாலும்
அவர்கள் உடல் உறவு அப்படி நெருக்கமாகவும் அடிக்கடி
யாகவும் வாய்க்கவில்லை. அடிப்பதிலும் அவளை வசை
பேசுவதிலும் உறவு திரும்பி விட்டது என்று நினைக்கும்படி
இருந்தது.

மதியம் சோறை மகன் எடுத்தாருவான். அப்போ
வேலையின் மேல் கருத்தாயிருந்தால் உண்ண மறந்துடுவான்.
அதை விறைப்பாய் வூட்டுக்கு கொணர்ந்து விடுவதைவிட
வேறு வழி? அப்புறம் மருமகள் புதுஸ்ஸா வடிச்சுக் குளம்பு
விட்டுப் பிசைஞ்சு, ஒக்காத்தி வெச்சு உண்டை உண்டையா
உள்ளங்கையிலே வெச்சு, அதை முளுங்கறப்ப, அப்பவும்
நெனைப்பு எங்கேயோ இருந்தாலும் நல்ல பொருள் உள்ளே
போகுதுங்கற வரை தெரிஞ்சுது. மருமகளுக்கும் கால்
பதியறச்சே பூமியிலே கனத்துப் போச்சு. இடுப்பு அகண்டு
கிட்டே வருது. ராசாத்தி உள்ளேயிருந்து சிரிக்கறயா?
அது குழந்தை; முதலா சுமக்குது. அவமேலே லேசாயிரு
தெரியுதா? நீ கனமில்லே. இருந்தாலும்-

ஒருநாள் திடீரெனப் புதுஸ்ஸா முளிச்சுகிட்டாப்போல,
தான் தோண்டின பள்ளம்-இவ்வளவு அகலம் ஆழமா?
அவனுக்கு வெகு ஆச்சர்யமாயிருந்தது. அகலம் ஆழம் மட்டு
மல்ல வட்டம் சுத்தமாயிருந்தது. நாளை எண்ண மறந்து
போச்சி. அதனால் என்ன ஆரம்பத்துல கஸ்டமாய்த்
தானிருந்தது. கண்ணு நொம்ப ஏடாகூடம் பண்ணிச்சு.
ஆனால் போவப் போவ பூமி மசிஞ்சு கொடுத்திருக்குது.
எப்படின்னா ஒரு மட்டம் ஒரே பாறாங்கல். அடுத்த மட்டம்
முழு மண் இல்லை. ஆனால் அவ்வளவு கஸ்டமாயில்லை.
அதன் கீழே மறுபடி மோட்டா. இப்படி மாறி மாறி ஒரு
வாய்ப்பு. நானும் என் நினைப்பு நாளுலேயிருந்து ஏர்