பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ❖ லா. ச. ராமாமிர்தம்

கிணத்துலேயே, அந்த சொல்ப நேரத்துக்கு, யாருக்குப்
பார்க்கக் கொடுத்து வெச்சுதோ, அத்தோடு சரி. ரெண்டு
பொணங்களும் மேலே மிதந்தப்போ, யார் கிட்டேயும்
விசாரத்துக்கு இடம் இல்லை. எப்பிடி நழுவிடுச்சோ.
உள்ளேயே எந்த சந்து பொந்துலே-பாறைக் கிணத்துலே,
அதுக்கா குறைவு? எந்த பொந்திலோ தங்கி, யார் கண்ணுக்
கும் படாமல் தண்ணிலே தன் தவத்தில் இருந்துகிட்டு-
ஜகத்துக்கே ஆத்தாளாச்சே! தன் குழந்தைகளுக்கு அருள்
புரிஞ்சுகிட்டிருக்காளோ?

ஆத்தா, நீ வாழ்க!