50
அலை தந்த ஆறுதல்
25 வயது : அப்ப எனக்கு புத்தியில்லேங்கறே! காலம் அப்படி இருக்கு...சரி விஷயத்த சொல்லிப்புட்டு சிரிச்சுத் தொலை...இல்லேன்னாக்க எவனாவது ஏதாவது ஒரு மாதிரின்னு நெனச்சுக்கப் போறான்.
15 வயது : இங்க வாங்க! (25 வயதுக்காரர் வயிற்றைத்
தடவுகிறார்).
25 வயது : ஏது! வரவர சேட்டை அதிகமாவுதே!
15 வயது இல்லே! காலைல பணம்பழம் சாப்புட்டதா எழுதியிருந்தீங்க... அதான் வயித்ல தனியா சத்தங் கேட்குதான்னு தட்டிப் பார்த்தேன்...
25 வயது : ஐயய்யே! ஏம்ப்பா! கிராமாந்தரத்ல இருந்து கிட்டுப் பணம்பழம் தெரியாது! நீ ல்லாம் இருந்து என்ன ப்ரயோஜனம்?
15 வயது : சின்னவங்க சொல்லி நீங்க என்னிக்கு ஒத்துக் கிட்டீங்க இதோ வந்துகிட்டிருக்காரே, படிச்ச பெரியவர் அவரு சொன்னா ஒத்துக்குவீங்களா?
25 வயது: எவ்வளவு படிச்சவரு’...அவரு சொன்னாக்க
சரி!
(தமிழ்ப் பேராசிரியர் வருகிறார்)
25 வயது)
15 வயது: ஐயா! வணக்கங்க...!
இருவே
பேராசிரியர் பெரியவர் : வாங்க! வாங்க. நான் அப்பவே கவனிச்சுகிட்டுத்தான் இருந்தேன்...ஒங்களுக்குள்ள ஏதோ படிப்பு சம்பந்தமா சந்தேகம்...சரிதானே?