பக்கம்:அழகர் கோயில்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கருப்பன் பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு இருபத்தோர் பந்தி அறுபத்தோர் சேனைதளம் அடக்கி அரசாள ஐயன் குருநாதன் 315 கம்பைகளைத் தானே வாகுடனே கட்டிக் கரைகாத்துவர பிறந்த மக்களெல்லாம் கூட்டி மலையாள நாடு மந்திர கீழ்நாடு 25 மகாராசன் கோட்டை வந்து தங்கி யிருக்கையிலே பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடு சிறந்தாய் மலையாளம் கருப்பனுட சேனைத்தளம் சிறப் படைஞ்ச கீழ்நாடு பிறந்தாய் மலையாளம் கருப்பன் துலங்குவது கீழ்நாடு 30 மலையாள நாடுவந்து மந்திர மகாராசன் கோட்டையிலே இருபத்தியோர் பேரும் இருந்தரசு செய்கையிலே தொட்டியன் தோக்கலியன் பேக்கலியன் கம்பளத்தான் தெய்வங்களை யெல்லாம் கட்டிக்காக்க முடியாதென்று - அவன் அருமை அறிஞ்சி ஆதரிக்க மாட்டாமல் 35 குணத்தை மலையாள நாடு கொண்டணைக்க மாட்டாமல் முன்னே ஆண்டுவந்த தேவதை யெல்லாம் முண்டுகட்டி முண்டுடுத்து முத்தன் இருக்கும் மூணு மலையாளம் துண்டுகட்டி துண்டுடுக்கும் துலுக்க மலையாளம் தொட்டிய பெரிய மலையாளம் பேர்பெரிய சீமை- அந்தக் 40 காப்புலிய நாடு கனத்த மலையாளம்-அந்த ராச்சியம் மலையாள நாடு மந்திரத்துக்கும் மீறுதுக ளென்று சொல்லி மூங்கிமரம் பிளந்து பஞ்சவர்ணப் பொட்டி செய்து பாக்குமரம் பிளந்து பஞ்சவர்ணப் பொட்டி செய்து தேக்குமரம் பிளந்து சித்திரவர்ணப் பொட்டி செய்து 45 ஆலமரம் பிளந்து அழகுவர்ணப் பொட்டி செய்து கட்டை பிளந்து கருவலப் பொட்டி செய்து வயிரம் பிளந்து வாகுடனே பொட்டி செய்து ஈச்சமரம் பிளந்து இவர்களுக்கு பொட்டி செய்து-உங்களை வகைமை தெரிஞ்சு வச்சாள மாட்டாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/322&oldid=1468200" இலிருந்து மீள்விக்கப்பட்டது