பக்கம்:அழகர் கோயில்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

328 அழகர்கோயில் 130 இடையாம் இடையழகி இளையானுட தங்கை இருண்டமலைப் யாப்பாத்தி இண்டஞ்செடி காடு ஏழுமலைப் பண்ணை இருண்டமலை கடந்தாள் மஞ்சமலைக் காடு அன்னங்கள் வாழும் மாவூத்துப் பண்ணை விட்டு மக்களைக் கூட்டி மாதரசி வாராளாம் தேக்குபலா நிறைந்த செல்லிமலைக் காடு 135 வீரமலை விட்டு விமலியவள் வாராளாம் காட்டுமாடு மேஞ்சடையும் கமுகு தென்னை நிறைந்த கருமலையை விட்டுக் கட்டழகி வாரானாம் சிட்டுமாடு மேயும் செவலைப் பசுமேயும் செங்கமலை விட்டு செல்வியவள் வாராளாம் அண்ணன் 140 கருப்பனுட கதவு சீரழகப் பார்வையிட மயிலைப் பசுமேயும் மண்மலையை விட்டு மக்களைக் கூட்டி மலையாளி கருப்பன் மணிக்கதவத்-தேடி மாதரசி வாராளாம் புள்ளிப் பசுமோரம் பொருந்துமலைக் காடு பொய்கைக்கரை விட்டு பூமானுட தங்கச்சி புள்ளைகளைக் கூட்டி பொற்படியாள் வாராளாம் 145 மலைப்பசு மேயும் மாசிமலையை விட்டு மக்களைக் கூட்டி மைக்காரி ராக்காயி மாதான் குலவையிட்டு வாராளாம் வரும் வழிதனிலே பாரமலை யருகே பாலர்களெல்லாம் அம்மா அர்மா என்றழைத்து பசியால் நினைத்து பாலர் பரிதவிக்க, பசியமர்த்த வேணுமென்றாள் 150 பழம்பிறக்கிப் பசி தீர்த்தான் பத்தினியாள் ராக்காயி கூடைகொண்டு பழம்பிறக்கி, கொய்யாப் பழம்பிறக்கி ராக்கு மாதுளம் பழம்பறித்து மக்கள் பசி தீர்த்தாளாம் நவ்வாப் பழம்பறித்து நல்லபசி தீர்த்து நாலுமலை கடந்து சீத்தாப் பழப்பறித்து செம்பன்மார் பசி தீர்த்தாளாம் செல்வியந்த ராக்காயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/335&oldid=1468215" இலிருந்து மீள்விக்கப்பட்டது