________________
பிற்சேக்ச்கை II : 8 கருப்பசாமி சந்தனம் சாத்தும் வர்ணிப்பு (தொடக்கமும் முடிவுமில்லாது கிடைத்த கையெழுத்துப்படி) கண்டார் பயந்தோட காடு காவலாளி கையால் தழுவியப்போ வேண்டும் வரம்கொடுத்து கமழுகின்ற சோலை விடுதிமலைப் சான்றோர்கள் வந்துதொழும் தங்க பண்ணையையும் வீரமனமதும் சாமி குடவரையும் மங்காத சோதியுள்ள மணிமந்திரத் தொட்டி மாசிமலைப் 5 தங்கக் குடவரையும் தலைமலைப் தளராஜன் கோட்டை நாரணராயர் பண்ணையையும் பண்ணை தனமிருக்கும் பெட்டியையும் தெப்பம் நாட்டுப்புறம் அத்தனையும் மளமளெனச் சுத்திவந்து மாட்டுத் தொழுவும் மலையாளப் பொன்கருப்பே உனக்கு மாறாத காவலென்றார் மண்டுமலை அத்தனையும் காத்து வருவாயென அரிமாயோனுந் தானுரைக்க எண்டிசையும் தாள்வணங்க எசமான் குடவரையில் இருதய சந்தோசமுடன் 10 அன்றுமுதல் இன்றுவரை அழகுபடி வாசலிலே அன்பருக்குக் காட்சிதந்து வண்டர்களைச் சங்கரித்த வைகுந்தன் குடவரையில் வல்லவருந் தான்அமர்ந்து வாடிய முகத்துடனே வணங்கிநிற்கும் மானிடர்க்கும் வருணன் முதல் தேவருக்கும் கூடியே ஆனந்தமாய் குடவரையில் முன்பாக குலுங்கிநிற்கும் பக்தருக்கும் வண்ணக் குலவையிடும் ராக்காயி பேச்சி வடிவழகி யானவர்க்கும் 15 மண்ணிலுரை மானிடர்க்கும் விண்ணிலுரை தேவருக்கும் மனமகிழ்ந்து வரங்கொடுச்சு