பக்கம்:அழகர் கோயில்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆட்டவிசேஷம் - கோடைத்திருநாள் சித்திரைப்பெருந் திருவிழா 367 பதாரருக்கு மரியாதை செய்வித்து பெருமாளை வழிநடை மண்டபங் களில் எழுந்தருளச் செய்து மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து தல்லாகுளம் இராமநாதபுரம் ராஜா மண்டபத்திற்கு இரவு 8 மணிக்கு வந்து சேருதல். பின் பின் இராமநாதபுரம் ராஜா மண்டபத்தில் மண்டபதார் சேளித்த பின் அலங்காரம் களைந்து திருவாபரணங்களைக் கையாக்ஷி பெட்டியில் ஒப்புவித்து திருமஞ்சனம், திருவாராதனம், தளிகை அமுது செய்து ஸ்ரீ ரெ.பட்டர் திருவாபரணங்கள் ஒப்புக்கொண்டு பெருமாளை புஷ்பப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலம் அலங்காரம் செய்து பின் மண்டபதாரருக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து வெள்ளியக்குன்றம் ஜமீன்தாரை அழைத்து வத்து ஜமீன்தாருக்கு நாகமுடி பட்டுப் பரிவட்டம் மரியாதை செய்வித்து பட்டருக்கு பரிவட் டம் மரியாதை செய்வித்து இரவு 3 மணிக்கு பெருமாள் புஷ்ப பல்லக் கில் புறப்பட்டு கருப்பணசுவாமி கோவிலுக்குமுன் வையாளியாகி கருப்பணசுவாமிக்கு மாலை கோராபரிவட்டம் சாத்தி பின் பெருமாள் வழிநடை மண்டபங்களிலும் மண்டபதார்களுக்கு வழக்கம்போல் பரி வட்டம் மரியாதை செய்வித்து காலை 7 மணிக்கு மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்குக் கோராப்பரிவட்டம் மாலை மரியாதை செய்வித்து அம்பலக்காரர் மண்டபம் போய் சேர்தல். அங்கு பக்தர்கள் சேவை நடைபெறும். பின் சீர்பாதக்காரர்கள் வெள்ளைச்சாமி கோனார் டிரஸ்டு மண்டபத்தில் அலங்காரத்தளிகை? சாப்பாடு முடித்து அம்பலகாரர் மண்டபத்தில் பல்லக்கில் பட்டு பண்ணாங்கு சாத்தி மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து அம்பலகாரர் மண்டபத்தைவிட்டுக் காலை 10 மணிக்கு பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி திருமலைக்கு புறப்படுதல். வழிநடை மண்டபங்களில் பெருமாளை எழுந்தருளச் செய்து மண்ட பதார்களுக்கு மரியாதை செய்ளித்து மூன்றுமாவடி மண்டகப்படிக்கு பகல் 3 மணிக்கு ஷை மண்டபத்தை விட்டு பெருமாள் சவ்வாரி பல்லக்கில் வழிநடை மண்டபங்களில் பெருமாளை எழுந்தருளச் செய்து மண்ட பதார்களுக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து இரவு 8 மணிக்கு மறவர் மண்டபம் (சிவகங்கை தேவஸ்தானம் கட்டளை மண்டபம்) சேர்த்து மண்டபதாரர் பூரணகும்ப மரியாதையுடன் பெருமாளை எதிர்கொண்டு அழைத்து மண்டபத்திற்குள் சேர்ந்தவுடன் மண்டப தார் சேவித்து பின் அலங்காரம் களைந்து மண்டபதார் சிலவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/374&oldid=1468257" இலிருந்து மீள்விக்கப்பட்டது