பக்கம்:அழியா அழகு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடை கொண்ட குகன் 10 :

பழிக்குரிய ஒரு செயலும் இல்லை. ஆகவே இத்துணே கார கணங்களால் நானும் உடன் வருகிறேன்."

" திருவுளம் எனின்.மற்றென்

சேனையும் உடனேகொண்டு

ஒருவலென், இருபோதும்

உறைகுவன்; உளராளுர்

மருவலர் எனின்முன்னே

மாள்குவன்; வசையில்லேன்;

பொருவரு மணிமார்பா!

போதுவென் உடன்'என்ருன், !

(ஒருவலென் . நீங்காமல், மருவலர் உளரானர் எனின் - பகைவர் உண்டானல். போதுவென் - வருவேன் )

'உங்களோடு இருந்து வாழ்வதையே வாழ்வாகக் கருது கிறேன். உங்களுக்குத் தீங்கு வருமாயின், அது கண்டு சும்மா இரேன். அது என் வலிமைக்கு அடங்காதென்ருல் என் உயிரையும் ஈ.வேன்' என்ருன், சுமித்திரை இலக்கு வனைப் பார்த்து, நீ இராமனுடன் போ' என்றபோது,

" மன்னும் ககர்க்கே இவன்வக் திடின் வா; அதன்றேல் முன்னம் முடி' " என்ருள். குகன் சுமித்திரை கூறியதைக் கேட்டவன் அல்லன். ஆனல் அவன். சிந்தனையாலும் அன்பாலும் இலக்குவைேடு ஒத்த தம்பியாகும் தகுதியுடையவன். ஆதலின், அவள் அங்கே இலக்குவனுக்குச் சொன்னதை இங்கே குகன் சொல்கிருன்.

1. கங்கைப். 67

2. நகர்,நீங்கு. 151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/109&oldid=523311" இலிருந்து மீள்விக்கப்பட்டது