பக்கம்:அழியா அழகு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் மனமாற்றம் 129

கண்டுணர்ந்து பெயர்கின்றேன்;

காமின்கள் நெறி' என்னுத்

தண்துறைஓர் காவாயில்

ஒருதனியே தான்வந்தான்: '

(உண்டாகிய இடுக்கண், இடுக்கண் - துன்பம். உலே யாத அழியாத குறிப்பு - கருத்து பெயர்கின்றேன். திரும்பி வருகிறேன். காமின்கள் - காவல் செய்யுங்கள் நெறி - வழியை, நாவாய் - ஒடம். தான் - குகன்.)

இராமனுக்குப் பகைவகைப் பரதனே உள்ளத்தே பாவித்துச் சீற்றம் பொங்கக் குதித்த குகன் இப்போது பரதனது துயர்க்கோலத்தையும் இராமனுடைய திருவுருவ ஒப்புமையையும் கண்டு கோபம் அடங்கி, தான் எண்ணி யது தவறு என்ற இரக்கம் உங்த அவனைச் சக்திக்க வர்தான். இப்போது அவன் உள்ளத்தில் ஒரு கேள்வி கின்றது: "இவன் பகை மேற்கொண்டு வரவில்லை என்பது தெளி வாகிறது. அப்படியானல் இவ்வாறு வரக் காரணம் என்ன?” என்பதே அந்தக் கேள்வி.

1. குகப்படலம், 31 வ. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/137&oldid=523339" இலிருந்து மீள்விக்கப்பட்டது