பக்கம்:அழியா அழகு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அழியா அழகு

என்று முதலில் தோற்றிய எண்ணம் அவனுடைய துயரக் கோலத்தைக் கண்டவுடன் மாறியது. அவனே அணிமையி: லிருந்து பார்க்கையில் இராமனுக்கும் அவனுக்கும் உள்ள ஒப்புமை புலயிைற்று. அப்போது குகனுடைய கோபம் போனதோடு மட்டுமன்றி இரக்கமும் உண்டாயிற்று. 'இராமனே அவன் ஒட்ட வரவில்லை:மீட்டும் அரசனக காட்ட வந்திருக்கிருன்' என்ற செய்தியைக் கேட்டானே இல்லையோ. அவன் வியப்பில் ஆழ்ந்தான்; உடனே உருகினன். பெருமூச்சு விட்டான். கீழே மறுபடியும் வீழ்ந்து பரதன் காலப் பற்றிக்கொண்டான். பொய் சிறிதும் இல்லாத உள்ளத்த கிைய அவன் பரதனைப் பார்த்துப் பேசலானன்:

கேட்டனன் கிராதர் வேந்தன்

கிளர்ந்தெழும் உயிர்ப்ப கிை மீட்டும்மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்கத் தீட்டரும் மேனி மைக்தன்

சேவடிக் கமலப் பூவில் பூட்டிய கையன் பொய்யில்

உள்ளத்தன் புகல லுற்ருன். ' (கிராதர் வேந்தன் - வேடர்ககு அரசன். உயிர்ப்பளுகி. பெருமூச்சை உடையவய்ை. முன்பே ஒருமுறை பரத லுடைய அடியில் வீழ்ந்து பணிந்தவதைலால் இப்போது மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான் என்ருர், வீங்க - மிக. திட்டரும் - சித்திரத்தில் எழுத இயலாத, மைந்தன் - பரத அடைய.1

அவன் விம்மினன்: இராமன் மீட்டும் அயோத்திக்கு, வந்துவிடப் போகிருன் என்ற எண்ணத்தால் அவனுக்கு, உண்டான மகிழ்ச்சிககுக் கங்கு கரையே இல்லை. "இப்படி

1. குகப்படலம், 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/140&oldid=523342" இலிருந்து மீள்விக்கப்பட்டது