பக்கம்:அழியா அழகு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியப்பும் உருக்கமும் 133

யும் ஒருவன் உலகில் இருப்பானு' என்று எண்ணி அவன் கெஞ்சம் உருகியது.

உணர்ச்சி வசப்படுபவனுகிய குகன் இப்போது பேசினன்' அவன் தொடக்கத்தில் ஒரு கோடியில் கின்று பரதனைப் பகைவகை எண்ணிக் கோபக் கனலேக் கக்கினன். இப்போதோ மறுகோடியில் கிடந்து உருகினன். ஊசலை எத்தனைக்கு எத்தனை ஒரு பக்கத்தில் உந்தித் தள்ளு கிருமோ, அத்தனைக்கு அத்தனை அது. மறுகோடியிலும் செல்லும். குகனது உணர்ச்சி, முன்பு இருந்த கிலேக்கு கேர் எதிரே நெடுந்தாரம் சென்றுவிட்டது.

இப்போது அவன் பேசும் பேச்சு மிகைபோலத் தோற்ற லாம். அதல்ை கம்பன் இங்கே அவன் உணர்ச்சி, வசப் :பட்டவதைலின் அப்படிப் பேசுவதுதான் இயல்பு என்ப தைப் புலப்படுத்துகிருன். 'பொய்யில் உள்ளத்தன் புகல அலுற்ருன்' என்கிருன் கம்பன். 'இராமனிடம் கங்குகரை அயில்லாத அன்புடையவனகிய குகன் இப்படிச் சொல்வான? இது ஏதோ முகமனை வார்த்தை என்று எண்ணக்கூடாது' என்பதற்காகவே அவ்வாறு அணைகோலிக் கொள்கிருன் கவிஞன். குகன் என்ன சொன்னன் என்பதைக் கேட்கலாம்:

"தாய்உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன நீத்துச்

சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து

புகழிளுேய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் கின்கேழ்

ஆவரோ தெரியில் அம்மா!' '

(கேழ் ஒப்பு.)

1. குகப்படலம். 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/141&oldid=523343" இலிருந்து மீள்விக்கப்பட்டது