பக்கம்:அழியா அழகு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் பண்பு 155,

(பொறி-புள்ளி. விக்கும் - கட்டும். மடங்கல் - சிங்கம்.):

குகனே முதலில் எப்படி அறிமுகப்படுத்தினனே அதே தோற்றத்தில் கதை முடியப்போகிற இந்தக் கட்டத் திலும் கம்பன் காட்டுகிருன்,

குகன் விடை பெற்றுக்கொண்டபோது இராமன், 'குற்றமற்ற துணைவகிைய உனக்கு என்ன உபசாரம் சொல்லப்போகிறேன்!” என்று சொல்லி, யானையும் குதிரை யும் பொன்னும் ஆடையும் அணிகலன்களும் வழங்கினன். பிறகு யாவரும் விடைகொண்டு புறப்பட்டார்கள். விபீஷணன் தன்னுடைய விமானத்தில் யாவரையும் எற்றிக்கொண்டு செல்லுகையில், முதலில் குகனே அவன் பதியாகிய சிருங்கிபேரபுரத்தில் விட்டுச் சென்ருன்.

இராமனுடைய பேரன்புக்கு உறைவிடமாகிய குகன் அவளுல் தழுவப்பெற்ற பேறும், அவன் வழங்கிய பரிசிலும், அவன் தந்த பேரன்பும் செல்வமாகக் கொண்டு வாழ்ந்தான். அவனுடைய அழகிய ஓவியத்தைத் தன்னுடைய உயிர்த் தன்மை நிரம்பிய சொற்களால் கோலஞ்செய்து காட்டு கிருன். கம்பன்.

'குகனத் தன் பதியின் உய்த்து. வீடணன் இலங்கை, புக்கான்' என்று கம்பன் குகனப்பற்றிய கடைசிச் செய் தியைக் கூறி முடிக்கிருன். அந்தக் குகன் நம் உள்ளத்தில் இராமனேடும் பரதைேடும் அருகில் கின்று தாயினும் ால்லணுகக் காட்சி அளிக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/163&oldid=523365" இலிருந்து மீள்விக்கப்பட்டது