பக்கம்:அழியா அழகு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே நினைப்பு

தமிழ் காட்டில் உள்ள திருக்கோயிலுக்குச் சென்று பிராகாரத்தை வலம் செய்யும்போதே அது இன்ன கோயில் என்று சொல்லி விடலாம். மூலமூர்த்திக்கு ஏற்ற வகையில் பரிவார தேவதைகளைக் கண்டால், இது சிவன்கோயில், இது பெருமாள் கோயில் என்று வேறு காண முடியும். :மூலமூர்த்திக்கு ஏற்ற வகையில் பரிவார தேவதைகளைத்

திருக்கோயிலில் சிறுவியிருப்பார்கள்.

கற்கோயில்களில் இருக்கும் இந்த முறையை ஒரு. வகையில் சொற்கோயிலிலும் காணலாம். சொற்கோயி லாகிய காப்பியத்தின் மூலமூர்த்தி, காப்பியத்தின் நாயகன். அந்த காயகனுக்குத் துணைவராகப் பலர் இருப்பார்கள். அவனுடைய மாற்ருனுக்குத் துணைவராக இருப்பவர்களும் பலர் உண்டு, இக்க இருவகைக் கட்சியினரிலும் அவரவர்கள் இனத்துக்கு ஏற்றபடி சுற்றத்தினரும் கட்பினரும் கூடி யிருப்பார்கள்.

நாயகன் கினைத்தவாறே கினப்பதும், காயகன் பேசிய வாறே பேசுவதும், அவன் செய்யுமாறே செய்வதும் அவனேச் சார்ந்தவர்களுக்கு இயல்பு. நாயகனுடைய குணாலங்களின் பேரொளி அவர்கள் வாயிலாகவும் ஒளிரும். இந்தப் போக்கைக் காப்பியக் கவிஞர்கள் தம்முடைய காவியங் களில் ஆங்காங்கே புலப்படுத்தியிருப்பார்கள்.

கம்பன், தான் கட்டிய இராமாயணமென்னும் சொற் கோயிலில் இராமன் என்னும் மூர்த்தியை தாயகனுக கிறுவி அவனுக்கேற்ற பரிவார தேவதைகளையும் அமைத்திருக் கிருன். இராமனுடைய பண்பு அவனுடைய கினைப்பிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/196&oldid=523398" இலிருந்து மீள்விக்கப்பட்டது