பக்கம்:அழியா அழகு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காளுததும் 223

பெண்ணெழிலின் முழுமையை இராமன் காட்டினன்; அவளுடைய வளமிகுந்த அவயவ நலன்களை எடுத்துச் சொன்னன். இங்கே, மென்மருங்குல்போல் வேறுள அங்க மும் மெலிங்காளாக இருக்கிருள் சீதை. இராமன் கொடுத்த படத்தில் சீதையின் அளகம், வனபவர் இல்லாவிடினும் தன் அழகுக்கு ஓர் அழிவு காணுதது; மேகத்தின் குழவியைப் போலப் படிந்திருப்பது; மேகத்தைச் செதுக்கி ஒன்ருகக் கட்டித் தேனையும் அகில் முதலியவற்றின் புகையையும் உஊட்டிப் பேரிருட் பிழம்பிலே தோய்த்துப் படிப்படியான கெறியமையச் செய்து சுமையாகச் செய்ததுபோல ஒளிர்வது. அநுமன் காணும்போதோ அவள் கூந்தல் திரண்டு ஒரே .சடையாகிய குழிலாக இருக்கிறது.

இங்கே கம்பன் முன்பு சொன்ன ஒன்றை கினேக்கும் வண்ணம் ஒரு பாடலே அமைக்கிருன். இராமன் மிதிலைமா நகர் புகும்போது சீதாபிராட்டி மதனனல் ஒவியத்தில் எழுதவொண்ணுதவளாக இருந்தாள். அப்பால் அவள் இராமனுடைய உள்ளத்தில் புகுந்தாள். இராவணனும் அவளேத் தன் நெஞ்சமாம் சிறையில் வைத்தான். இந்தச் சமயம் பார்த்து மன்மதன் அவள் உருவத்தை எழுதிவிட் டான். அன்று எதை வண்ணமாக்கி வைத்து எழுதக் கருதினனே அதே அமுதத்தைக்கொண்டே எழுதிவிட் விட்டான். அப்படி அவனல் எழுத முடிந்ததற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று சிதை இப்போது முன்னிலும் எளிய ளானள். இவனும் அவள் அங்கத்தை மட்டும் எண்ணுமல் பண்புகளையும் எண்ணும் திறம் பெற்ருன். முன்பு மனத் துக்குக் கிளர்ச்சியை உண்டுபண்ணும் மதனனக இருந்து எழுதப் புகுந்தபோது அவனல் முடியவில்லை. இப்போது தானே அங்கத்தை இழந்து அங்கத் தொடர்பின்றித் .தாயவகை, அனங்ககை கின்று சீதையைக் கண்டான்; அழகிய உருவத்தை எழுதிவிட்டான். அவன் எழுதின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/231&oldid=523433" இலிருந்து மீள்விக்கப்பட்டது