பக்கம்:அழியா அழகு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அழியா அழகு

சொல்லுவார்கள்; சத்துவம், விறல் என்று சொல்வதும் உண்டு.

பேசுகின்ற பேச்சைவிடப் பேசாத பேச்சாகிய மெய்ப் பாடுகள் நுட்பமானவை. உள்ளத்தில் எழும் உணர்ச்சி அ ைகள் உடம்பிலே வந்து மோதும்போது உண்டாகும் அறிகுறிகள் அவை.

இவ்வாறு உண்டாகும் மெய்ப்பாடுகளிலும் இரண்டு: வகை உண்டு. ஒருவகை கினேயாமல், தடுக்க முடியாமல் எழுவன. மந்ருெரு வகை கினைத்து எழுவன; அதனல், தடுக்கக் கூடியவை. கோபம் வந்தால் கண் சிவப்பதும் உடம்பு பதறுவதும் தடுக்க முடியாதவை. வைவது நினைத்துச் செய்வது; தடுக்கக்கூடியது. குழந்தையைக் கண்டு அன்பினால் முகமும் கண்ணும் மலர்வது இயற்கை; தடுக்க முடியாதது. அணேத்து முத்திட்டுக் கொஞ்சுவது. ஓரளவு செயற்கை கினைத்துச் செய்வது; தடுக்கக்கூடியது. தடுக்கக் கூடியதாலுைம் அந்தச் செயலும் தொடர்ந்து: நடைபெறுவதே பெரும்பான்மையான வழக்கம்.

பக்தி, உவகை, துயரம். வீரம், அருவருப்பு என்று. மனித மனத்தில் உண்டாகும் உணர்ச்சிகளின் அறிகுறி களாகிய மெய்ப்பாடுகளே வடமொழியிலும் தென் மொழியிலும் சுவையைப்பற்றிக் கூறும் இலக்கண நூல்கள் விரித்து உரைக்கின்றன. உலக நிகழ்ச்சிகளிலும் இலக்கியங்களிலும் புலப்படுபவற்றை ஆராய்ந்து தொகுத்து: அந்த இலக்கணங்களே அமைத்திருக்சிருர்கள். நாடக நால்களில் அபிநயங்களைப்பற்றிய பகுதியிலும் மெய்ப் பாடுகள் வரும்.

ஒர் உணர்ச்சி மிகுதியானபோது முதலில் அதனே உடையவன் தனக்கு இயல்பாக உள்ள கிலேயை இழந்து விடுகிருன். அப்பால் அவ் வுணர்ச்சியின் விளைவான மெய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/24&oldid=523226" இலிருந்து மீள்விக்கப்பட்டது