பக்கம்:அழியா அழகு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அழியா அழகு

பாட்டில் முன் இரண்டடி காம் நின்ற இடத்தையும் பின் இரண்டடி இனிக் கவனிக்க வேண்டியதையும் நினைப் பூட்டுகின்றன. தான் காட்டப் போகிற பாத்திரத்தின் பேரைக்கூட இந்தப் பாட்டில் கவிஞன் சொல்லவில்லை. ஆனல் அவளுக்கு இராமன் வில்லை ஒடித்த செய்கை உள்ளத்தைக் குளிர்வித்ததென்றும் அதனல் விழிகள் விரிய முகம் மலர அவள் வருகிருள் என்றும் புலப்படுத்துகிருன். குளிர் மனத்து ஒன்றும் உண்கண் மதிமுகத்து ஒருத்தி” என்று சொல்கிருன் அல்லவா? இனி அந்தப் பாத்திரம் இயங்குகிறது.

லேமாலே வேகமாக ஓடி வருகிருள். அவள் கழுத்தில் அணிந்த வடங்கள் பல கிற மணிகளை ğ» .60)b.li_f ®J) @A!... காதில் அணிந்த குழைகளும் மணிகளால் ஆகியவை. அவை இப்போது அசைந்து மின்னுகின்றன. பல வண்ணங்களே க் காட்டுதலால் வானவில் லேப் போல ஒளிர்கின்றன. விரை வாக வருவதல்ை ஆபரணம், ஆடை, குழல் எல்லாம் ஒன்ற ைேடு ஒன்று பிணைந்துகொள்கின்றன; சிக்கிக் கொள் கின்றன. இடையில் ஆடை, மேல் ஆடை என்று அவள் அணிந்திருக்கிருள். அவள் குழல் கட்டுத் தளர்ந்து சோர் கிறது. அரை குலேயத் தலே குலேய ஓடி வருகிருள். உவகை, பெரும் புயலேப் போல அவள் உள்ளத்தே அடிக் கிறது. சீதைக்கு மணவாளன் வரவேண்டுமே என்று எங்கின ஏக்கத்தை அவள் உள்ளம் அல்லவா அறியும்? மின்னல் நுடங்குவது போல வருகிருள்; விரைவில் வரு ஒருள். மேகம் போன்ற கூந்தலும் வானவில் போன்ற அணிகலன்களும் தோன்ற,அவள் உடம்பு மின்னலேப் போல விட்டு விளங்குகிறது. அவள் கண் மட்டும் அந்த வேகத் திலும் ான்ருகத் தெரிகிறது. நீண்ட கண் அது; விசால, மான கன: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/28&oldid=523230" இலிருந்து மீள்விக்கப்பட்டது