பக்கம்:அழியா அழகு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீராக் காதலன் 81.

பிறகு இராமன், "நாங்கள் இங்கே இன்று தங்கி, காளைக்குக் கங்கையைத் தாண்டிச் செல்ல வேண்டும். ே உன் கூட்டத்தாரோடு உன் ஊர் சென்று இனிது தங்கி விட்டு, எங்களுக்கு வேண்டிய நாவாய்களோடு சாளே விடியலில் வா’ என்று குகனே நோக்கிச் சொன்னன்.

இராமனுக்கு அருகில் முதலில் வந்தபோது அவனுடைய திருமேனி எழிலில் ஈடுபட்டான் குகன். அப்போது அவனல் ஒன்றும் பேச முடியவில்லை. முதலில் இராமனே பேசினன். பிறகு தான் கொணர்ந்த கையுறையைப் பற்றிக் குகன் கூறினன். அப்போதுதான் இராமன் )ركة ليبي 5 تنتtللأسس உள்ளன்பிலே விளைந்த காதலைப் பாராட்டினன். இப் போது குகன் தன் எண்ணங்களேச் சொல்லும் துணிவு பெற்ருன். நீ காளேக்கு வா' என்றவுடன் குகன் பேசலானன்.

"இனிமேல் ஒரு கணமும் இராமனைப் பிரியக் கூடாது' என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டது. பிரிய முடியாது என்றே தோன்றியது. ஆகவே, "ஊருக்குப் போய்வா' என்று இராமன் சொன்னது அவனுக்குப் பொறுக்க வில்லை. "இந்த உலகத்துக்கே தலைவனகிய செல்வன் ;ே உன்னை மரவுரியோடு இந்தக் கோலத்தில் காண்கிறேன் ாான். எனக்கு உன்னிடம் தக்க வகையில் அன்பு இருக்கு மால்ை, இந்த நிலையில் உன்னைப் பார்த்த கண்களைப் பிடுங்கி எறிந்திருக்க வேண்டும். ஆனல் அப்படிச் செய்யவில்லை. கண்களோடு நிற்கிறேன். அத்தனை அன்பு இல்லாத கள்வன் நான். இந்தத் துன்பத்தோடு என் ஊருக்கு வேறு போய் இருப்பதா? நான் என் வீட்டுக்குப் போகமாட்டேன்' இங்கிருந்தபடியே ஏவல் செய்வேன்' என்று உள்ளம் கைந்து சொன்னன் குகன்.

வ” 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/89&oldid=523291" இலிருந்து மீள்விக்கப்பட்டது