பக்கம்:அவள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 77

நடப்பது நடந்து கொண்டேயிருக்கிறது. நடப்பது தான் நடக்கப்போகிறது.

உன் காய்ந்த உதடுகளை அவ்வப்போது ஈரத்துணியால் துடைக்கிறாள்.

உன் நிலையில் எந்த மாறுதலும் இல்லை.

டாக்டருக்குப் போன் செய்ய என்ன இருக்கிறது? உண்மையில் நாங்கள் சொல்ல வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ? அவருக்கு ஏற்கெனவே தெரிந்து விட்டதை நாங்களே நிதரிசனத்தில் தெரிந்துகொள்ள இப்படி ஒரு வழி.

கட்டையாக் கிடந்தபடி பாஸ்கர், என்ன பாடு படுத்துகிறாய்?

மணி பத்து, பதினொன்று...

எனக்குப் பசியென்று தெரியவில்லை. அவளும் அது பற்றி ஏதும் முற்படவில்லை.

லேசான குளிர் ஒன்று தெரிந்தது. என்னையறியாமலே சிலிர்த்துக்கொண்டேன். ஆனால் இது பனிக்காலம் அல்லவா! ஆனால் இப்போல்லாம், எதுதான் ரீதியில் நேர்கிறது? தொலை தூரத்தில் எங்கோ மழை பெய்து கொண்டிருக்கிறது.

ஜன்னல்கதவுகள் படபடவென அடித்துக்கொண்டன. அனு எழுந்துபோய் அவைகளை அழுந்த மூடி, கொக்கிகளை மாட்டிவிட்டு வந்தாள். உடனேயே வாசற்கதவைத் தட்டும் சத்தம். நான் எழுந்தேன்.

'வேண்டாம்' கட்டளையில் அவள் குரல் கணீர்.

ஒரு வேளை டாக்டர்-'

'அது டாக்டர் இல்லை.'

பின்னே யார்? ஆனால் நான் கேட்கவில்லை. முதுகுத் தண்டு 'சில்'--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/123&oldid=1496936" இலிருந்து மீள்விக்கப்பட்டது