பக்கம்:அவள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 83

நான் திரும்பியபோது அவள், தன் நிலைக்கு வேகமாக மீண்டுகொண்டிருந்தாள். ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால் முகத்தில் வேர்வை ஜலகண்டமாய்க் கொட்டியிருந்தது.

ஆகவே, எது நிஜம், எது நடக்ககூடியது என்பதைக் கூட நிர்ணயிக்க நாம் தகுதியில்லை.

“you love him very much. don't you, அனு?”

“எனக்குத் தெரியாது.” அவள் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்குத் தெரியாது என்றால், எதுதான் யாருக்குத் தெரியப்போகிறது! you love him very much don’t, you?”

களைப்பாயிருந்தாள் புன்னகை புரிய முயன்றாள்.

“கலியாணம்னு பெரியவா பண்ணி வெக்கறா. இனி மேல் உனக்கு இந்த வீடு இல்லை. இனி இவனேதான் உன் கதி என்று வெளிப்படையாகச் சொல்லாமலும், பச்சையாகச் சொல்லியும், வம்சம் வழி வழியா, பெண்ணுக்கு வழங்கும் புத்தி—இல்லை, தீர்ப்பு, பரம்பரையா நடந்து வரது. அதுதான் எனக்குத் தெரியும்.”

உன்னை வாரிக்கொள்ளும் பார்வையில், உன்னையே பார்த்துக்கொண்டு சொன்னாள். என் பக்கம் திரும்பக் கூட இல்லை. அவளே எங்கிருந்தோ திரும்பி வந்தாற் போல், அத்தனை களைப்பாயிருந்தாள்.

களையாயிருந்தாள்.

“you love him, dont you, அனு”

“என்னைச் சும்மாவிடு” எரிந்து விழுந்தாள். “Love எனக்குத் தெரியாது. But I want him. இவரில்லாமல் என்னால் முடியாது. உடன்கட்டையேறப் போறேனா? கேக்காதேயுங்கள். ஆனால் இவர் எனக்கு வேணும், எனக்கு வேணும், எனக்கு வேணும், வேணும்வேணும், வேணும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/127&oldid=1496945" இலிருந்து மீள்விக்கப்பட்டது