பக்கம்:அவள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xv

 

ஸ்வாமி பெயர்: ஸப்தரிஷீசன்
அம்பாள்: ப்ரவர்த்த ஸ்ரீமதி (தமிழ் பெருந்திரு)
என் தகப்பனார் பெயர்: சப்தரிஷீசன்
அம்மா பெயர்: ஸ்ரீமதி

இந்தப் பெருமிதமும் இது தரும் பலமும்தான் என்னை இன்னும் தாங்கிக்கொண்டிருக்கிறது.

எங்கள் குடும்பத்துக்கும் இந்தக் கோவிலுக்குமிடையே பின்னிப் பிணைந்திருக்கும் உறவு அதுவே தனி வரலாறு, ஐதிகம் படைத்தது. என் முன்னோர் காலத்தில் ப்ரசித்தி பெற்றது.

***

உள்ளிருந்து கேட்கிறது. அந்தச் சின்ன உருவுக்குள் என்ன உர்த்தண்டமான குரல்!

"நான்- நான் - செல்லக்குட்டித் தாத்தாவுலே ஹேமாப் பாட்டியைப் பாக்குவேன்."

என்ன சொல்கிறாள்? அது எப்படி முடியும்? அதைப் பற்றி அவளுக்குக் கவலையில்லை. என்ன நினைத்தாள். என்ன வெளி வருகிறது? சொற்களுடன் விளையாடுகிறாள், பொருத்திப் பார்க்கிறாளா? அல்ல குழந்தை வாய்மூலம் அர்த்தநாரீச தத்துவமா?

எல்லாம் நீயே நினைத்துக்கொள்; நீயே சந்தோஷப்படு.

***

எழுத்தாற்றல்-அதிலும் சிலரிடம் காணும் தனித்வம் ருத்ராம்சம் என்றே நினைக்கிறேன். பிறப்பித்த நிமித்தம் நிறைவேறும்வரை சிருஷ்டியால் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் சக்தி. இது அழிக்கும் ஊழித் தீ அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/15&oldid=1495888" இலிருந்து மீள்விக்கப்பட்டது