பக்கம்:அவள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xx

 

தருணத்தின் தரிசனம். My discovery of my genius. ஐயோ சொல்ல வல்லியே, தவிக்கிறேனே! அடியெடுத்துக் கொடேண்டி!"

***

அனந்த நாராயணன் எனும் இளைஞன் என்னைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறான். எங்கள் அலைவரிசை பல விஷயங்களில் ஒன்றாயிருப்பதே எங்கள் நட்பின் நீடிப்புக்குக் காரணம்.

வயது ஏற ஏற, குமிழிகள் ஒவ்வொன்றாய். வெடிக்கும்போது, திகைப்பாயிருக்கிறது.

"சே, வாழ்க்கையில் என்ன இருக்கிறது?" என்று ஒரு சமயம் வாய்விட்டுச் சவித்துக் கொண்டபோது, சொன்னான்.

"சில அழகான மக்களைச் சந்திக்கிறோம், அதற்குத் தான் வாழ்க்கை".

Life is there, because we meet in it some beautiful people' அவன் சொன்னது இதுதான்.)

எவ்வளவு உண்மை! அர்த்தங்களை வீணாகத் தேடிக் கொண்டு, ஏமாந்து, நொந்து அதற்குப் பிறர்மேல் ஏன் பழி போட வேண்டும்? எண்ணத்தின் அவ்வப்போதைய துலக்கத்தில் கிடைக்கும் தரிசனங்களும், சந்தோஷங்களும் போதாதா?

அவரவர் பூத்ததற்குத் தக்கப்படி. அழகு என்ற போது, அனந்து, சதையாழ, அழகை மட்டும் குறிக்கவில்லை.

தெய்வம் மனுஷ்யரூபேன! உடல் சுத்தம் (அதன்மூலம் மனச்சுத்தம் வரும்போது வரட்டும்), எதிலும் ஆர்வம், எதிலும் நேர்த்தி காண்பதில் முனைப்பு, சின்னச் சின்னப் பொருள்களை, பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/20&oldid=1495893" இலிருந்து மீள்விக்கப்பட்டது