பக்கம்:அவள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயினி 165

'ஊம், பத்மாவுக்குக் கல்யாணமாக்கும்' 'பத்திரிகை உங்கள் கையில்தான் இருக்கிறது.' 'ஹூம், உன் தங்கை அழகி அல்லவா? அவன் இன்னும் ஜலத்தையேதான் பார்த்துக்கொண்டிருந்தான். "அதைப்பற்றிச் சந்தேகம் வேறேயா? இப்போது பட்டுவை நான் பார்த்து எட்டு வருஷங்களாச்சு. உற்ற வயசு, இன்னும் நன்றாய்த்தான் இருப்பாள்.' பட்டுவா?” 'அதான், பத்மா தான். நான் அவளைப் பட்டு, பட்டம்மா என்று தோன்றினாற்போல் அழைப்பேன். எங்களிடையில் சண்டை வந்தால் பத்து மொத்து’ என்பேன். பத்து என்னவோ மொத்துதான். கதைப் புத்தகம் படிப்பதில்கூட அவளுக்கு ஆசை கிடையாது. அம்மா பத்மா வென்பாள். அப்பாதான் வாய் நிறையப் ‘பத்மாவதீ!' என்று கூப்பிடுவார்.' 'ஆஹா, உன் அப்பாவை எனக்குத் தெரியுமே, எவ்வளவு வாயும் மனசும் நிறைந்த மனுஷர் என்று!' வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ஆனால் அப்பாவுக்கு என்னவோ என்மேல்தான் இஷ்டம்.” "நீ தாக்ஷாயணி அல்லவா? தோற்ற சீட்டைத் தூக்கி எறிவதுபோல் பத்திரிகையை அலட்சியமாய் வீசினான். அது பறந்து சென்று ஜலத்தில் கிடந்த ஒரு பாறாங்கல் மேல் வீழ்ந்தது. 'ஏன் அதை எறிந்தீர்கள்?" மூண்டெழும் கோபத்தில் அவளுக்குக் கன்னங்கள் குறுகுறுத்தன. "ஏன்? இதை வைத்துக்கொண்டு கலியாணத்திற்கு நாம் போகப் போகிறோமா?"

'போகாவிட்டால் எறியனுமோ? கோபக்கண்ணீர் கண்களை உறுத்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/209&oldid=1496357" இலிருந்து மீள்விக்கப்பட்டது