பக்கம்:அவள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயணி 171

"உங்கள் கேள்வி பெரிய கேள்வி. என்னென்று பதில் சொல்வேன்! அந்த நிமிஷத்தையே தான் இப்பவும் நினைத்துக் கொள்கிறேன். நினைக்க நினைக்க விவரங்கள் பிரளயமாய்ப் பெருகுகின்றன. எதையென்று எடுத்துச் சொல்வேன்.'

'இல்லை, பார்வையின் அந்த க்ஷணப்பதிவில் என்னில் என்ன கண்டாய்? சொல்லேன்!

'கல் விக்கிரகம் முகம் திரும்பினாற்போல் 'திக்" கென்றது. அதற்குமேல் என்னைக் கேட்காதேயுங்கள். எனக்குச் சொல்லத் தெரியவில்லை."

'இல்லை, சொல்; சொல் உன்னைக் கெஞ்சுகிறேன். சொல்லேன்! நீ சொல்லச் சொல்ல எனக்குப் பலம் ஊறுகிறது.' - "ஒரு தினுசாய் அடிவயிற்றைத் துண்டம் போட்டது. பழுதையென்று நினைத்துப் பாம்பைத் தூக்கிவிட்டேன் போல், 'பக் கென்று சில்விட்டுக்கொண்டு ஒர் அதிர்ச்சி, முதலில் பக்'; அப்புறந்தான் திகில், குழறல், கூக்குரல் எல்லாம்.'

'உன் பாஷைக்குத் தலைவணங்குகிறேன்."

'என் நெஞ்சில் உடனே பதிந்தவை யாவை? உங்கள் நெற்றிமேட்டில் கட்டை விரல் நகத்தளவில் வளைவாய் ஒரு வடு இருக்கிறதே அது."

அவன் அதைத் தொட்டுக்கொண்டான். சின்ன வயசில் திண்ணைக்குத் திண்ணை தாவிக் கீழே விழுந்து விட்டேன்.

'உங்கள் முகத்தில் கடுகடுப்பு இல்லாவிட்டாலும் அதில் கடினம் இருந்தது. உங்கள் கண்களில் கனிவு ஏன் இல்லை? இப்படிக் கண்டது என் கண்களின் குற்றமோ?’’

"என் கண் லேசாய்ப் பூனைக் கண். அதனாலேயே என் பார்வையில் அதற்கு இல்லாத உக்கிரம் இருக்கலாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/215&oldid=1496377" இலிருந்து மீள்விக்கப்பட்டது