பக்கம்:அவள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த்வனி 225


இன்று மாலை 'லாட்ஜ்' வாசலில் வந்து தெருப்பக்கம் காற்று வாங்க நின்றேன். எதிர் வீட்டுக் குறட்டில் ஒரு பையன் பம்பரம் ஆடுகிறான், இல்லை ஆடப் பார்க்கிறான். சின்னப் பையன், நாலு ஐந்து வயதுக்குமேல் இராது. கயிற்றை இழுத்துப் பம்பரத்தில் சுற்றக்கூட அவனுக்குச் சக்தியில்லை. அவனிடம் போய் கையை நீட்டினேன். பையன் முறுக்கிக் கொள்ளவில்லை. உடனே கொடுத்துவிட்டான். ஜாட்டியைச் சுற்றிக்கொண்டே "அம்பி உன் பேர் என்ன?" என்று கேட்டேன்.

"சேகர்."

"ஓ! நீயும் சேகரா?”

பம்பரம் கயிற்றிலிருந்து விடுபட்டு ரோஷத்துடன் தரைமீது குதித்தது. குளவிபோல் கூவிற்று; கற்பூரக் கொழுந்து போல் துாங்கிற்று. பையன் முகமே கண்களாயின. ஏற்கெனவே கார்ட்டூன் பொம்மை மாதிரி தான் இருக்கிறான். பம்பரத்தை எடுத்து அவன் கையை விரித்து உள்ளங்கையில் விட்டேன். குறுகுறு-சேகர் வாயிலிருந்து உடைந்த குழாய் போல் சிரிப்பு பீறிட்டது. பம்பரம் படிப்படியாக வேகம் குறைந்து, கிழவன் தலை போல் ஆடிக் கையிலிருந்து கவிழ்ந்தது.

“தாத்தா தாத்தா நுன்னொண்ணா தடவை பண்ணுங்கோளேன்! தாத்தா தாத்தா! Please!" ஓ கான்வென்டா? அந்த நிமிஷத்திலிருந்தே நாங்கள் சினேகிதர்களாகி விட்டோம்.

"நுன்னொண்ணு தரம்!"

"நுன்னொண்னு தரம்"

"சேகர்! சேகர்" என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளிலிருந்து ஒரு பெண் வந்தாள். பையன் அவளிடம் ஓடிப்போய் அவள் இடுப்பைக் கட்டிக்காெண்டான்.

அ.-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/269&oldid=1497463" இலிருந்து மீள்விக்கப்பட்டது