பக்கம்:அவள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346லா. ச. ராமாமிருதம்



பிரயாணம் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறேன். இது எப்படி நேர்ந்ததென்றுகூட எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. உத்யோகச் சலுகை ஏதோ கிடைத்தது.

மதுரை தாண்டும் வரைகூட திகைப்பு சரியாய்த் தெளியவில்லை. அவளை நோக்கிச் சென்று கொண்டிருக் கிறேன் என்பதை நம்ப முடியவில்லை.

மதுரையில் மீனாக்ஷி.

தென்காசியில் லோகநாயகி (ஆமாம். இனிமேல் வடகாசிக்குப் போகப் போறேனாக்கும்!) திருநெல்வேலியில் மறந்து போச்சு.

நாகர்கோயில்...

கன்யாகுமரியில் கன்யாகுமரி.

விடுதியில் மூட்டை முடிச்சுகளை எறிந்துவிட்டு, கடலில் ஸ்னானம் செய்துவிட்டு, முன்னால் அவளையும் குழந்தைகளையும் போகவிட்டு நான் சற்றுப் பின் தங்குகிறேன். நெருங்க நெருங்க ஏன் ஒரு பயம்? திரும்பி விடலாமா?

இனிமேலா? நீ மட்டுமா? நடக்கிற காரியமா? அதற்குத் துணிச்சல் இருக்கிறதா? திரும்புதல் என்பதே கிடையாது. தெரியுமோன்னோ? திரும்புதல், மன்னிப்பு சென்று போனவை பரிகாரம், விடுதலை-ஏன், சொற்களே மாயமான்கள், மனிதன் துணை தேட அமைத்துக்கொண்ட கருவி. அவைகளின் அடிப்படை பயத்தின் மேல் மனித சுவர்க்கமே தாங்கி நிற்கிறது; பொய் மேல் எழுப்பிய பொய்க் கட்டிடம்.

காத்திருந்த வயது இத்தனை கழிந்தது கணக்குத் தெரிய வில்லை. கோயில் வெளி வாசல் கடந்து ப்ராகாரம் தாண்டி, உள் வாசல் புகுந்து உள் ப்ராகாரத்தில் பாதி சுற்றி சன்னிதானத்தில் நுழைந்து, அவளுடன் நேருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/390&oldid=1497784" இலிருந்து மீள்விக்கப்பட்டது