பக்கம்:அவள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 லா. ச. ராமாமிருதம்

நாளைக்கு வாழ்க்கையே அப்படித்தானேயிருக்கு ஏதோ நம்மால் முடிஞ்சது. எல்லாம் சுருண்டு படுத்துக் கிடக்கு. ஆனால் மாமி எழுந்து நடமாட ஆரம்பிச்சுட்டா.

ராமாமிருதம், இப்பத்தான் எனக்கு நினைப்பு வரது. உங்கள் பாஷையில் பயங்காரமா’ப் பசிக்கிறது. சாப்பிட வரையா? நாம் ரெண்டுபேரும் சேர்ந்து உட்கார்ந்து எத்தனை நாளாச்சு?

அம்மா, உன் நம்பிக்கை எந்த வகையைச் சேர்ந்தது?

அவள் இங்கேயும் எங்கேயோ ஊடுருவி நிற்கிறாள். எங்கேயென்றுதான் பிடிபடவில்லை.

நாங்கள். அதாவது என் முன்னோர் காலத்திலிருந்து என் குடும்பம் - எங்களில் அவரவர் தனித்தனியாவோ, ஒருங்கோ, அவ்வப்போது அவளைப் பார்க்கும்போதெல்லாம் சாந்தஸ்வரூபியாகத்தான் காட்சியளிக்கிறாள்.

சன்னிதியுள் நுழையும்போதே, துளும்பாத ஓர் அமைதியில் அமிழ்வதுபோல உணர்ச்சி. திருவாசியை அடைத்துக்கொண்டு ஆள் உயரத்துக்குத் தன் குழந்தைகளுக்காக, உலகத்தின் துயரத்தையே தாங்கிக்கொண்டு நிற்கிறாள். எத்தனை வருஷங்களாக நிற்கிறாய்? தோளும் காலும் வலிக்கல்லே?

பெருந்திருத்தாய்
இல்லை. அதற்கும் மேலே.
ஆசை சீமதிப் பாட்டி
அம்மா பேர் ஸ்ரீமதி
இந்தக் குடும்பத்தில்
வழிவழியாய் ஸ்ரீமதி.

ஒன்பது மணிக்கே கண் செருக ஆரம்பித்துவிட்டது. (1) சேகரும் ஸ்ரீகாந்தும் ‘night show' போவதாகச் சொல்லிக்கொண்டது தண்ணீருக்கடியில் நானிருக்கக் கேட்ட மாதிரியிருந்தது. தூங்கிப்போய்விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/66&oldid=1496263" இலிருந்து மீள்விக்கப்பட்டது