பக்கம்:அவள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜ்வாலாமுகி 41


'ஜ்வாலாமுகி'

சங்கரன் எனும் துறவி எனக்குப் புரியவில்லை.

ஆனால் சங்கரன் எனும் கலைஞனைப் புரிகிறது.

நான் சங்கரன் இல்லை.

ஆனால் இருவரும் எழுத்து வர்க்கம்தானே!

அன்றொரு நாள் உனை நான் சந்தித்தேன். உன்னைப் பார்க்கவில்லை; உன்னோடு பேசவில்லை. புரிந்துகொள். இல்லை, நான் எனக்குப் புரிந்துகொள்கிறேன். இப்போது நான் சொல்லப்போகும் முறையில் உன்னைக் காட்டிக்கொண்டதே நீதானே, உனக்குப் புரியாதது எனக்கென்ன புரியப்போகிறது? நீ விரும்புவதும் இந்தச் சரணாகதம் தானே!

ஒரு நாள் மாலை உலாவில், ஒரு மைதானத்தை ஒற்றையடிப் பாதைவழி கடந்துகொண்டிருக்கையில், ஒரு பச்சைப் பாப்பா - இரண்டு வயது இருக்காது - நீல கவுன், இரட்டைப் பின்னல், முன்நெற்றிமேல் செண்டு மல்லி, "கமகம்," தன்னந்தனியாக உட்கார்ந்தபடி கைகளைக் கொட்டிக்கொண்டு என்னைப் பார்த்ததும் "பூவா பூவா" என்னவோ குளறிக்கொண்டு, வாய் நிறையச் சிரித்துக் கொண்டு முகத்தைத் திருப்பி என்னத்தையோ பார்த்து, மீண்டும் என்னைப் பார்த்து.

"பூவா பூவா" -

அவள் முகம் வழி என்முகம், தானே திரும்பியதும் -

- இதோ ஒருகால்வீச்சு எட்டலில் பச்சைப்புல் அடரில், மூன்று விரல் தடுமனுக்கு, நீளம் என் உயரத்துக்கு மேல், கட்டுக்கட்டாய் முடைந்து தரையில் கிடத்திய பின்னல் மூச்சு விடுவது போல்......

NO! NO!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/85&oldid=1496392" இலிருந்து மீள்விக்கப்பட்டது